Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

63 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! – 2 ஆயிரத்தை தாண்டிய பலி!

63 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! – 2 ஆயிரத்தை தாண்டிய பலி!
, ஞாயிறு, 10 மே 2020 (09:34 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20,288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7,796 பேரும், டெல்லியில் 6,542 பேரும், ராஜஸ்தானில் 3,708 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,614 பேரும், தமிழகத்தில் 6,535 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் செயல்படும்? – அரசு விளக்கம்!