Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

35 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா – இந்திய நிலவரம்!

35 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா – இந்திய நிலவரம்!
, வெள்ளி, 1 மே 2020 (09:03 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,610 லிருந்து 34,752 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1075 லிருந்து 1,147 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 4,395 பேரும், டெல்லியில் 3,515 பேரும், ராஜஸ்தானில் 2,584 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,660 பேரும், தமிழகத்தில் 2,363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டாங்க! – மாதவரம் மார்க்கெட்டில் கூடிய கூட்டம்!