Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாள் பாதிப்பு கிட்டதட்ட 20,000; அதீதமாகும் கொரோனா!

ஒரு நாள் பாதிப்பு கிட்டதட்ட 20,000; அதீதமாகும் கொரோனா!
, ஞாயிறு, 28 ஜூன் 2020 (10:18 IST)
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒரே நாளில் 19,906 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,953லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881லிருந்து 3,09,713 ஆகவும்,  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685லிருந்து 16,095 ஆகவும் உயர்வு.  
 
அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,273 ஆக உயர்வு. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த சிரிப்பு இருக்கே சிரிப்பு... ஈபிஎஸ் புகழ் பாடிய நமது அம்மா!