இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
	
	 
	கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் குறைந்து வருகிறது. 
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,685 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,50,215 ஆக உயர்ந்தது. புதிதாக 33 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,572 ஆக உயர்ந்தது.
	 
	கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,158 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,609,335 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16,308 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
	 
	இந்தியாவில் 1,93,13,41,918 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,39,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.