Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பலி: 3வது நாடாக உருவெடுத்துள்ள இந்தியா!

கொரோனா பலி: 3வது நாடாக உருவெடுத்துள்ள இந்தியா!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (12:04 IST)
இந்தியாவில் பாதிப்பு 4 கோடியே 19 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,19,52,712 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,072 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,00,055 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,00,17,088 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,35,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 9.20 லட்சம் பேர் இறந்துள்ளனர். பாதிப்பில் 3ஆம் இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 6.30 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த வழக்கு: பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து