Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

39 ஆயிரமாக உள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

39 ஆயிரமாக உள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
, சனி, 24 ஜூலை 2021 (09:37 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,13,32,159 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 546 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,20,016 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,05,03,166 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,08,977 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை டூ நாகை; பயணிகள் கப்பல் சேவை! – துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்!