Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்; நலம் பெறுவதால் நம்பிக்கையில் இந்தியா!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (11:37 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 28 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்புகளின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் முன்பை விட பாதிப்புகள் தற்போது அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 23,29,639 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16,39,600 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6,43,948 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பு 46,091 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு இறப்பு வீதம் ஆயிரத்திற்கும் மேல் இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments