Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் அதிகரிப்பு! – இன்றைய நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் அதிகரிப்பு! – இன்றைய நிலவரம்!
, ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (10:29 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 78 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 78,64,811 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,18,534 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 70,78,123 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,68,154 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வில் 6 மார்க் என நினைத்து மாணவி தற்கொலை: ஆனால் உண்மையான மார்க் எவ்வளவு தெரியுமா?