Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிதாக 2.57 லட்சம் பேருக்கு கொரோனா... 4,194 பேர் மரணம்!

புதிதாக 2.57 லட்சம் பேருக்கு கொரோனா... 4,194 பேர் மரணம்!
, சனி, 22 மே 2021 (10:02 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 2.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  2,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,62,89,290 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும், புதிதாக 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,30,70,365 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29,23,400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க.. அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை!