Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 மணி நேரத்தில் 13,586... பரவுதலில் தீவிரம் காட்டும் கொரோனா!!

24 மணி நேரத்தில் 13,586... பரவுதலில் தீவிரம் காட்டும் கொரோனா!!
, வெள்ளி, 19 ஜூன் 2020 (10:05 IST)
இந்தியாவில் ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,66,946லிருந்து 3,80,532 ஆக அதிகரிப்பு. 
கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 12,237லிருந்து 12,573 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,94,325லிருந்து 2,04,711 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,20,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,751 பேர் பலியான நிலையில் 60,838 பேர் குணமடைந்துள்ளனர். 
 
தமிழகத்தை பொருத்த வரை 52,334 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 25,601 பேரும், டெல்லியில் 49,979 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு இந்தியர் கொல்லப்பட்டால் மூன்று எதிரிகளை கொல்ல வேண்டும்: முதல்வர் ஆவேசம்