Publish Date: Fri, 02 Jun 2023 (20:10 IST)
Updated Date: Fri, 02 Jun 2023 (20:14 IST)
ஒடிஷா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்னாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்குள்ள பாலாசோர் என்ற பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விபத்து வனப்பகுதியில் நடைபெற்றதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.