Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

170 கோடி டோஸ், 1.52 கோடி பூஸ்டர் டோஸ்: இந்தியா தடுப்பூசி நிலவரம்!

170 கோடி டோஸ், 1.52 கோடி பூஸ்டர் டோஸ்: இந்தியா தடுப்பூசி நிலவரம்!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:45 IST)
நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,23,39,611 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,188 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,04,062 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,08,40,658 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,94,891 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியை கடந்துள்ளது. இதில் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

64 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!