Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (18:03 IST)
இந்தியா கூட்டணியின் அங்கமாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இருந்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸ் சர்ச்சை கருத்து கூறியுள்ளது.
 
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த எதிர்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்த நிலையில், அந்த கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. வேட்பாளர்களையும் தற்போது அறிவித்து வருகிறது.
 
இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் என்பவர் கூறியபோது, "கெஜ்ரிவாலை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு பார்சிவால் என கூறலாம். டெல்லியில் நிலைமை மோசமானதற்கும் காங்கிரஸ் பலவீனம் அடைந்ததற்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததே காரணம். அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வரும் நிலையில், இனியாவது டெல்லியில் தனித்து போட்டியிட வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments