Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை அளிக்காததால் ஆத்திரம்: உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட காவலர்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (20:05 IST)
விடுமுறை கொடுக்காத ஆத்திரத்தில் உதவி ஆய்வாளர் ஒருவரை காவலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஹானி என்ற காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் லலித்குமார். 25 வயதான இவர் தனக்கு விடுமுறை வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதினார். ஆனால் காவல் ஆய்வாளர் கொரோனா காரணமாக இருப்பதால் விடுமுறை அளிக்கும் அதிகாரம் உதவி காவல் ஆய்வாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் விடுமுறை விண்ணப்பத்தை பார்த்த உதவி காவல் ஆய்வாளர், லலித்குமாருக்கு விடுமுறை வழங்க முடியாது என தெரிவித்து உள்ளார். காவல் ஆய்வாளர் வந்தவுடன் அவரிடம் அனுமதி கேட்டு விடுமுறை எடுத்துக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார் 
 
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட ஆய்வாளர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். அவரது அறைக்கு சென்ற லலித் குமார் தனது விடுமுறை குறித்து தெரிவித்துள்ளார். உடனே ஆய்வாளரும் அவருக்கு விடுமுறை வழங்கி விட்டார். இந்த நிலையில் விடுமுறை அனுமதி பெற்று வெளியே வந்த லலித்குமார் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தையில் பேசியதாகவும் இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்ததாகவும் தெரிகிறது
 
ஒரு கட்டத்தில் லலித்குமார் திடீரென தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உதவி ஆய்வாளரை சுட்டுள்ளார். தற்போது உதவி ஆய்வாளர் உயிருக்கு போராடி வருவதாகவும் லலித்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments