Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னாவ் சம்பவம்: இறந்த பெண்ணின் தாயார் காங்கிரஸ் வேட்பாளர்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (14:32 IST)
உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 50 பெண்கள் உட்பட 125 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. 

 
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் மறுபுறம் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
இந்நிலையில் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி இன்று வெளியிட்டார். முதல்கட்ட பட்டியலில் மொத்தம் 125 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
இதில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ஊதிய உயர்வு போராட்டத்திற்கு தலைமை ஏற்ற பூனம் பாண்டே உள்ளிட்ட 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள், 40 விழுக்காடு இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியதுவம் பெற்ற இந்த முயற்சியால், உத்தரபிரதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று ப்ரியங்கா இது குறித்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்