Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது: பாஜக

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:05 IST)
நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த இளைஞர்களின் புரட்சியால், அதிபர் மற்றும் பிரதமர் பதவி இழந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற நிலையில், தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பீகார் மாநில துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான சாம்ராட் சௌத்ரி, நேபாளம் இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அங்கு அமைதி நிலவியிருக்கும் என்று தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அங்கே இந்தளவு குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் மட்டுமே நிலவியிருக்கும்," என்று சாம்ராட் சௌத்ரி கூறியுள்ளார்.
 
மேலும் நேபாளத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழலுக்கு இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சௌத்ரியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய போரை ஊக்குவிப்பதே இந்தியாதான்.. புதின் நட்பில் எந்த பயனும் இல்லை! - ட்ரம்ப் ஆதங்கம்!

தவெக தலைவர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. சென்னை ஐகோர்ட்டில் விசாரணை..!

சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஜிஎஸ்டி போடும் ஹோட்டல்கள்! குறைக்காதது ஏன்? - ஓட்டல் உரிமையாளர்கள் விளக்கம்!

அரசு பேருந்துகளில் இனி வாட்டர் பாட்டில் கிடைக்கும்.. போக்குவரத்துக் கழகம் புதிய முயற்சி..!

இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடலில் இதயத்தை காணவில்லை.. திருடப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments