Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவியை நீயே வெச்சுக்கோப்பா! – முதல்வர் ஆகிறாரா சச்சின் பைலட்?

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:28 IST)
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க சமாதான முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார். இந்த சிக்கலை பயன்படுத்தி சச்சின் பைலட்டை பாஜகவின் பக்கம் ஈர்க்கவும் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. ராகுல் காந்தி சச்சினுக்கு போன் மூலமாக பேசியுள்ளார்.

ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் சச்சின் பைலட்டை முதல்வராக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments