Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:15 IST)
9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கோயிலை நிர்வகிக்க இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. புதிதாக நிர்வாக குழு அமைக்கும் வரை, நீதிபதி தலைமையிலான குழு கோயிலை நிர்வகிக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டபோராட்டத்திற்கு இன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
 
கோயில் நிலவறைகளில் உள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கணக்கிட ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதும் இதனையடுத்து 5 நிலவறைகள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் ஆபரணங்களின் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் என தெரியவந்தது என்பதும் தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments