Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமனை தரைக்குறைவாக பேசிய காங்கிரஸ் எம்.பி..

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (10:41 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் எம்.பி. தரைக்குறைவாக பேசியதாக பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்ததால் மக்களவையில் சலசலப்பு நிலவியது.

வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் எம்.பி.அதிர் ரஞ்சன் சவித்ரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறித்து தரைகுறைவான வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார்.

அதாவது நிர்மலா சீதாராமன் பலவீனமானவர் என்பது போன்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவையில் உள்ள பாஜகவினர் கண்டத்து கோஷம் போட்டனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லா, அவை மரபை மீறி பேச வேண்டாம் எனவும் இது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் இதற்கு பதிலடி தருவது போல், ”தாம் இப்பொழுதும் நிர்மலா தான் எனவும், தன்னிறைவு பெற்ற பெண்” எனவும் கூறினார். இதனால் மக்களவை சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments