Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியா? பிரியங்கா சோப்ராவா? – கன்ஃப்யூஸ் ஆன காங்கிரஸார்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:29 IST)
டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பிரியங்கா காந்திக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி குறித்து பல விஷயங்களை பேசிய சுரேந்தர், பேசி முடிக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் நீடூடி வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் ‘ஜிந்தாபாத்’ என்று முழங்கினார். அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்களை சொன்ன சுரேந்தர் கடைசியாக பிரியங்கா காந்தி என்று கூறுவதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என முழங்கினார்.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சோப்ரா அவருக்கு சைகை காட்ட தவறை உணர்ந்த சுரேந்தர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்கா சோப்ரா வாழ்க என கூறிய அந்த வீடியோ இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments