இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு நிலையை வழங்கியிருந்தது, இது காஷ்மீர் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து தனித்துவமாக உள்ளது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கியது. ஆனால் மத்திய அரசு இந்த சட்டப்பிரிவை ரத்து செய்த நிலையில் அதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனல தற்போது காங்கிரஸ் தலைவா் ஸல்மான் குர்ஷித், இந்தோனேஷியாவில் இந்த சட்டப்பிரிவு ரத்து சரியானது என்று தெரிவித்தார்.
“தனித்துவமான” அடையாளம் என்பது ஒரு “பெரிய பிரச்சினை” என்ற கருத்தை முன்வைத்து, 370வது சட்ட திருத்தம் அகற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட நல்ல மாற்றங்களை அவர் எடுத்துரைத்தார். அதில் தேர்தலில் 65 சதவீத வாக்காளர்கள் கலந்து கொண்டு, காஷ்மீரில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தோற்றுவிக்கப்பட்டது இந்த முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் முயற்சிகளை அவர் எதிர்த்து, அந்த பகுதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் குர்ஷித், ஜெய்டியூ எம்பி சஞ்சய் குமார் ஜாவின் தலைமையில் இந்தோனேஷியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சந்தித்து இந்தியாவின் பிரதேச பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிமுகப்படுத்தும் பல கட்சிக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
முன்னதாக இந்த சட்டதிருத்தம் அகற்றுதலை எதிர்த்த காங்கிரஸ், பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இப்போது அரசியல்ரீதியாக இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சியும் ஏற்று கொண்டதாக கருதப்படுகிறது.