Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரியானா தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியா? பாஜகவுக்கு சிக்கல்?

Rahul Gandhi

Siva

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:56 IST)
ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க அவர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்த நிலையில் நேரடியாக பரூக் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க செய்தார்.

இதே வியூகத்தை தான் அரியானாவிலும் ராகுல் காந்தி செயல்படுத்த இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒன்றிணைக்க காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சியை கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜகவுக்கு எதிரான அலை ஹரியானா மாநிலத்தில் வீசிவரும் நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் கூட வென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ரிஸ்க் எடுக்க விரும்பாத ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார்: பாஜக பிரமுகர் அதிர்ச்சி கருத்து..!