Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் தடியடியில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (21:38 IST)
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடி சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சிக்கி படுகாயமடைந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது 
 
கேரள மாநில தலைநகரில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவும் ஆதரித்தது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்துள்ளனர். 
 
இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் போராட்டத்திற்கு ஆதரவு தர வந்த கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட காங்கிரஸ் பிரமுகர்களும் தடியடியால் தாக்கப்பட்டனர். இதனை அடுத்து கேரளா காங்கிரசார் போலீசாரின் இந்த அத்து மீறலை கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மக்கள் பிரதிநிதி ஒருவரையே காவல்துறையினர் தடியடி நடத்தியதால் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments