Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையில் 20 கிமீக்கு சாலை அமைத்ததா சீனா?

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:31 IST)
இந்திய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீட்டருக்கு சீனா புதிதாக சாலை ஒன்றை அமைத்து இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான உறவு சிக்கலில் உள்ளது 
 
இந்த நிலையில் இந்தியாவை நோக்கி புதிய சாலைகளை கட்ட சீனா அவ்வப்போது திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா புதிய சாலை ஒன்றை கட்டமைத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள இமாச்சல பிரதேச மாநில நிர்வாகிகள் எல்லை பகுதி மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments