Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாமி பட பாணியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீச்சு

சாமி பட பாணியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீச்சு
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:40 IST)
பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால் மீது வாலிபர்கள் மிளகாய் பொடியை வீசி வித்தியாசமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால். இவர் மொசாபர் நகர் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவரை பார்க்க கட்சி தொண்டர்கள் வந்திருந்தனர்.
 
இந்நிலையில், 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்து பேசிக் கொண்டு இருந்த நேரத்தில், திடீரென எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தினர்.
 
இதில், அவரது கண்களில் மிளகாய் பொடி பட்டு, எரிச்சல் ஏற்பட்டு துடித்தார். இந்த நேரத்தில் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். எதற்காக அவர்கள் மிளகாய் பொடி வீசினார்கள்? என்பது தெரியவில்லை.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பெயர் தெரிய வந்துள்ளது. பியானா கிராமத்தை சேர்ந்த கபில் என்று அடையாளம் கண்டுபிடித்தனர். ஆனால், 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி நீர் கலவரம் : ஆர்ஜே பாலாஜி பரபரப்பு பேச்சு (வீடியோ)