Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 11 முதல் காலை 11 மணி வரை சிறுவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:14 IST)
இரவு 11 மணி முதல் காலை 11 மணி வரை தியேட்டர்களில் சிறுவர் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ என்ற திரைப்படம் வெளியான தினத்தில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டிக்கெட் விலை உயர்வு, சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி ஆகியவை தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி  16 வயதிற்குட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவும் இரவு 11 மணிக்கு பின்னர் தியேட்டருக்கு அனுமதிக்க கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா படம் பார்ப்பது என்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments