Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய படைவீரர்களை சுட்டுக் கொன்ற சக வீரர்! – சத்தீஸ்கரில் பரபரப்பு!

மத்திய படைவீரர்களை சுட்டுக் கொன்ற சக வீரர்! – சத்தீஸ்கரில் பரபரப்பு!
, திங்கள், 8 நவம்பர் 2021 (12:25 IST)
சத்தீஸ்கரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய படை வீரர்களை சக வீரரே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டம் லிங்கம் பகுதியில் துணை ராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த முகாமில் மத்திய ரிசர்வ் படையினர் தங்கியிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் பணியில் இருந்த ஒரு வீரர் ஏகே47 துப்பாக்கியால் உறங்கி கொண்டிருந்த சக வீரர்களை சரமாரியாக சுட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் அவரை பிடித்து கைது செய்துள்ளனர். அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை