Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த சத்ரபதி சிவாஜியின் வாரிசு!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (14:28 IST)
மராட்டிய சிங்கம் என்று பெயரெடுத்தவர் சத்ரபதி சிவாஜி. அவரை இன்னும் மராட்டிய மக்கள் வணங்கி வருகின்றனர். ஆனால் அவருடைய வாரிசு ஒருவர் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
 
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் வாரிசான உதயன்ராஜே என்பவர் சதாரா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து சரத் பவாரின் நண்பரான ஸ்ரீநிவாஸ் பாட்டீல் போட்டியிட்டார்.
 
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் சதாரா தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீநிவாஸ் பாட்டீல் 6.36 லட்சம் வாக்குகள் பெற்று உதயன்ராஜே போஸலேயை தோற்கடித்தார்.
 
மராட்டிய மன்னரின் வாரீசு மராட்டிய மண்ணிலேயே தோல்வி அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments