Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (17:13 IST)

சாட்ஜிபிடியில் பலரும் கிப்ளி செய்து விளையாடி வரும் நிலையில் ஏஐ ஆதார் கார்டையே உருவாக்கி தருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது சர்வமும் ஏஐ மயமாகிவிட்ட நிலையில் பல துறைகளிலும் ஏஐயின் தலையீடு, பயன்பாடு இருந்து வருகிறது. அதுதவிர எண்டெர்டெயின்மெண்ட் துறையிலும் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சமீபமாக பலரும் சாட்ஜிபிடியில் கிப்ளி ஸ்டைலில் தங்கள் புகைப்படங்களை மாற்றி ஷேர் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சாட்ஜிபிடி இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையையே தயாரித்து காட்டியதுதான் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஆதாரில் உள்ளது போல புகைப்படம், பெயர், ஆதார் எண் போன்றவையும் உள்ளன. ஆனால் இந்த எண், பெயரெல்லாம் சாட்ஜிபிடி ரேண்டமாக உருவாக்குவது என்றும், இவை உண்மையான ஆதார் அட்டையின் தகவல்களை கொண்டது அல்ல என்றும் ஏஐ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ஆனால் பொதுவாக ஏஐ என்பவை பயிற்றுவிக்கப்பட்டவை. அப்படியாக இருப்பின் இதுபோல ஆதார் அட்டைகளில் இடம்பெறும் படங்களை உருவாக்க ஏற்கனவே பலர் கிப்ளி ஸ்டைல் போன்றவற்றிற்காக உள்ளீடு செய்த படங்களை ப்ராசஸ் செய்து இதை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏற்கனவே ஆதார் தகவல்கள் டார்க் நெட் உள்ளிட்டவற்றில் லீக் ஆவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், சாட்ஜிபிடியும் கசிந்த ஆதார் டேட்டாக்களை கொண்டு ட்ரெயின் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏஐ நிபுணர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments