Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு!

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு!
, செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:58 IST)
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்தன.  
 
டெல்லியில் இன்று நாட்டின் 72வது குடியரசு தினவிழா நடைபெற்று வருவதால் மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி நடத்தக்கூடாது என போலீஸ் விதித்த நிபந்தனைகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீசி கலைக்கப்பட்டுள்ளது. 
 
சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த அந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியத்துடன் நண்பகல் 12மணிக்கு பிறகே டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயற்சித்து குடியரசு தினவிழா நடைபெறுவதற்கு இடையூறாக இருந்ததால் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விற்பனைக்கு வந்தது எல்ஜி கே42: விவரம் உள்ளே!!