Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை விழித்தெழுமா விக்ரம் லேண்டர்.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் முக்கிய தகவல்..!

நாளை விழித்தெழுமா விக்ரம் லேண்டர்.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் முக்கிய தகவல்..!
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:22 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 நிலவை சென்றடைந்த நிலையில் அதிலிருந்து விக்ரம் லேண்டர் நிலவில் கால் வைத்து பல்வேறு தகவல்களை அனுப்பியது.
 
இந்த நிலையில் நிலவில் பகல் பொழுது முடிந்ததால் விக்ரம் லேண்டர் அணைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் நிலவில் பகல் தொடங்கி சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மின் சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.  
 
விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று இஸ்ரோவின்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
விக்ரம் லேண்டர் ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன் 40 சென்டிமீட்டர் உயரத்துக்கு எழுப்பப்பட்டு மீண்டும் பத்திரமாக தரையறுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி..!