Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எந்த ஊழலும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (09:50 IST)
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  ஊழல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நான் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். 
 
என்னை கைது செய்தது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய சந்திரபாபு நாயுடு வழக்கு திசை திருப்புகிறார்கள் என்றும் நான் எந்த ஊழலை செய்யவில்லை என்றும் சட்டப்படி இந்த வழக்கை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் ஊழல் புகாரில் உண்மை இல்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு முறையான தகவல் இல்லாமலே சிஐடி போலீஸ் சார் என்னை கைது செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார் 
 
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பல இடங்களில் சாலை மறியல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் குப்பம், சித்தூர் ஆகிய பகுதிகளில் தெலுங்கு தேசி கட்சியினர் சாலைகளை மறித்து டயர்களை எரித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments