Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அக்டோபர் 5ஆம் தேதி வரை சிறை..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:48 IST)
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது காவல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆந்திர முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு  14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது காவலை நீட்டிக்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
 
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிப்பு என விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டதால் மீண்டும் சந்திரபாபு நாயுடு சிறை சென்றுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments