Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அக்டோபர் 5ஆம் தேதி வரை சிறை..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:48 IST)
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது காவல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆந்திர முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு  14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது காவலை நீட்டிக்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
 
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிப்பு என விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டதால் மீண்டும் சந்திரபாபு நாயுடு சிறை சென்றுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments