Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்குள் வந்தது நிபா வைரஸ் பரவல்.. கட்டுப்பாடுகளை தளர்த்திய கேரள அரசு..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:43 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இருவர் பலியான நிலையில் ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது என நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக புதிதாக நிபா வைரஸ் தொற்று யாருக்கும் பரவாத நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments