Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிரொலி; ஈஸ்டர், ஹோலி கொண்டாட கட்டுப்பாடுகள்?! – மத்திய அரசு கடிதம்!

கொரோனா எதிரொலி; ஈஸ்டர், ஹோலி கொண்டாட கட்டுப்பாடுகள்?! – மத்திய அரசு கடிதம்!
, புதன், 24 மார்ச் 2021 (13:57 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஈஸ்டர், ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பல மாநிலங்களில் இரண்டாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுவதால் கொரோனா முன்னெச்சறிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹோலி மற்றும் ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுக்கு மக்கள் கூட்டம் கூடும் என்பதால் கொரோனா அபாயம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் கொரோனாவை தடுக்க ஈஸ்டர் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர் பாட்டை போட்டு எண்ட்ரி கொடுக்கும் எச்.ராஜா! – ட்ரெண்டாகும் வீடியோ!