Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தஞ்சையில் மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா – 205 ஐ நெருங்கிய பாதிப்பு!

தஞ்சையில் மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா – 205 ஐ நெருங்கிய பாதிப்பு!
, புதன், 24 மார்ச் 2021 (09:46 IST)
தஞ்சையில் புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 7 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும்  2 பள்ளிகளில் 7 மாணவ, மாணவிகளுக்கு  கொரோனா உறுதியாகியுள்ளது.
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தஞ்சையில் புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 7 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தஞ்சையில் கொரோனா பாதித்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

47,262 ஆக உயர்ந்த தினசரி பாதிப்பு; இந்தியாவில் இன்றைய கோரோனா நிலவரம்!