Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் கழிவுநீர் தொட்டி இறப்புகள்; நிரந்தர தடை விதிக்க அரசு திட்டம்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (17:35 IST)
இந்தியாவில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பலர் விஷவாயு தாக்கி இறக்கும் நிலையில் முற்றிலுமாக அதை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதால் விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. மனிதர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அது கடுமையாக பின்பற்றப்படாமல் உள்ளது.

முன்னதாக கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தினால் சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு புதிய மசோதா ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி மனிதர்களை கழிவுகளை அள்ள செய்வதை தடுத்தல், முழுவதும் எந்திரங்களை பயன்படுத்துதல், மீறும் தனிநபர், நிறுவனத்திற்கான அபராதம் மற்றும் சிறை தண்டனையை அதிகப்படுத்துதல் ஆகிய புதிய சட்ட திட்டங்களை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments