Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்நாத் சிங் தலைமையில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புதிய குழு –மி டூ எதிரொலி

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (15:43 IST)
பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான மி டூ இயக்கம் பரவலான விவாதத்தை உருவாகியுள்ளது. மி டூ வின் எழுச்சியால் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தனது பதவியை இழந்துள்ளது.

இதனையடுத்து தற்போது மத்திய அரசு தற்போது அலுவலகங்களில் பெண்கள், தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது மற்றும் அதனை முறையிடுவதற்கான ஒரு குழுவினை ஒவ்வொரு அலுவலகங்களிலும் உருவாக்குதல் எனப் பல்வேறு அம்சங்களை முன்வைத்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, மேனகா காந்தி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு மூன்று மாதக் காலங்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்