Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? எந்த தடுப்பூசி? – மத்திய அரசு விளக்கம்!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? எந்த தடுப்பூசி? – மத்திய அரசு விளக்கம்!
, புதன், 27 அக்டோபர் 2021 (08:29 IST)
இந்தியாவில் குழந்தைகளுக்கு என்னென்ன கொரோனா தடுப்பூசிகள் எப்போது செலுத்தப்படும் என்ற விவரங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா பேசுகையில் “குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் இந்தியாவில் அடுத்த ஜனவரி – மார்ச் மாதத்திற்குள் தொடங்கப்படும். குழந்தைகளுக்கு கோர்பவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ் டி, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அவற்றை போதிய அளவு இருப்பு வைத்தல், விலை நிர்ணயித்தல் போன்ற பணிகளும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியர்; பணியிடை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்!