Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது பரிந்துரையை ஏற்று கொண்ட மத்திய அரசுக்கு நன்றி: ராகுல் காந்தி

எனது பரிந்துரையை ஏற்று கொண்ட மத்திய அரசுக்கு நன்றி: ராகுல் காந்தி
, ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (16:51 IST)
எனது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசுக்கு நன்றி என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
ஒமிக்ரான் வைரசை இந்தியாவில் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் 18 வயது மேலானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்
 
இதனை அடுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற எனது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசுக்கு தனது நன்றி என்றும் அவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பூஸ்டர் தடுப்பூசி மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகள் இணைந்து தொடங்கும் புதிய கட்சி! – பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!