தேசிய கொடி வாங்கலைனா ரேஷன் கிடையாதா? – மத்திய அரசு அளித்த விளக்கம்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (08:58 IST)
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வாங்காவிட்டால் ரேசன் பொருள் தர மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் 75வது சுதந்திர தின விழா அன்று தங்கள் வீடுகளில் தேசிய கொடி வைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில், தேசிய கொடி வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் தருவோம் என கூறியதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில் “நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மாதம்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கபட்டு வருகின்றன. ஆனால் தேசிய கொடி விற்பனை தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தேசிய கொடி வாங்க சொல்லி நுகர்வோரை கட்டாயப்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments