Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீராத பப்ஜி மோகம்; போன் கொடுக்க மறுத்த பெற்றோர்! – துப்பாக்கியை எடுத்த சிறுவன்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (08:39 IST)
பாகிஸ்தானில் பப்ஜி விளையாட போம் வாங்கி தராததால் சிறுவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், ஆன்லைன் விளையாட்டு மோகமும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையான சிறுவர்கள் பலர் விபரீதமான பல செயல்களை செய்ததால் பல நாடுகளில் இதுபோன்ற விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலும் பப்ஜி விளையாட்டுக்கு சில ஆண்டுகள் முன்னதாக தற்காலிக தடை விதிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது ஆதிப் என்ற சிறுவன் பப்ஜி விளையாட்டில் தீராத மோகம் கொண்டவனாக இருந்துள்ளான்.

இதற்காக தனக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் மூழ்கிய சிறுவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments