Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மிரட்டலா? துப்பாக்கி கேட்டு விண்ணப்பம்

Advertiesment
lalu
, சனி, 20 ஜனவரி 2018 (06:05 IST)
சமீபத்தில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை  தீர்ப்பளித்த சிபிஐ நீதிபதி துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் அவருக்கு மிரட்டல் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி சிவபால் சிங் லாலு பிரசாத்துக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் நீதியை நிலைநிறுத்தும் வகையில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சிவபால்சிங்.

இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் கைத்துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு மிக விரைவில் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிட்காயின் முதலீட்டாளர்கள் 10 ஆயிரம் பேர்களுக்கு நோட்டீ'ஸ்: வருமான வரித்துறை அதிரடி