Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதலமைச்சர் மனைவியிடம் சிபிஐ விசாரணையா?

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (15:35 IST)
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மனைவியிடம் சிபிஐ விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சர் ஆக இருந்தபோது பல்வேறு முறைகேடு செய்ததாக அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் 16 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ரயில்வே துறையில் வேலைக்காக அணுகியவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நிலத்திற்கு பதிலாக ரயில்வே பணிகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து லாலு பிரசாத் யாதவ் மனைவி ரப்ரிதேவி மற்றும் அவரது மகள்களிடம் சிபிஐ விசாரணை செய்து வருவதாகவும் அவர்களது வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments