Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Mahendran
புதன், 7 மே 2025 (17:45 IST)
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) இயக்குநராக உள்ள பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரையை பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு சமர்ப்பித்தது. இதனை மத்திய அமைச்சரவை நியமனக் குழு அனுமதித்து, அவரை மீண்டும் சி.பி.ஐ இயக்குநராக நியமித்துள்ளது.
 
பிரவீன் சூட்டின் தற்போதைய பதவிக்காலம் மே 25ல் முடிவடைகிறது. இனி அவர் 2026 மே மாதம் வரை அந்தப் பொறுப்பில் தொடருகிறார்.
 
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பிரவீன் சூட், 2023-ஆம் ஆண்டு சி.பி.ஐ இயக்குநராக தேர்வானார். அதற்கு முன்னர் கர்நாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
 
இந்த நீட்டிப்பு மூலம், சி.பி.ஐ அமைப்பில் நிலையான நிர்வாகம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

தமிழகத்தில் என்ன நடக்கிறது? நிதி நெருக்கடி நிலவுகிறதா? உயர்நீதிமன்ற நீதிபதியின் சரமாறி கேள்விகள்..!

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments