Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சி.பி.ஐக்கு செக்!!! அதிரடியில் இறங்கிய மம்தா பானர்ஜி

சி.பி.ஐக்கு செக்!!! அதிரடியில் இறங்கிய மம்தா பானர்ஜி
, ஞாயிறு, 18 நவம்பர் 2018 (11:05 IST)
ஆந்திராவைத் தொடர்ந்து மேற்குவங்கத்திலும் சிபிஐ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கடுப்பான பாஜக அரசு சந்திரபாபு நாயுடுவுக்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வருவதாகக் கூறப்பட்டது. கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் வீடுகளில் அதிரடியாக சி.பிஐ.யை ஏவி சோதனைகள் செய்ய வைத்தது.
 
இதனால் அதிருப்தியடைந்த சந்திரபாபு நாயுடு எங்களுக்கா செக் வைக்கிறீர்கள் இருங்கள் நான் என்ன செய்கிறேன் பாருங்கள் என்று அதிரடியான முடிவை அறிவித்தார்.
 
இந்தியாவில் டெல்லியைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் சிபிஐ சோதனை செய்ய அந்தந்த மாநிலங்களின் பொது ஒப்புதல் தேவை.  அந்த பொது ஒப்புதலை நீக்கி புதிய அரசாணையை வெளியிட்டார். அதன்படி ஆந்திராவில் இனி சிபிஐயால் சோதனைகளில் ஈடுபட முடியாது.
webdunia
 
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சரும் தங்கள் மாநிலத்தில்  சி.பி.ஐ. நுழைவதற்கு தடைவிதித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கு வங்கத்திற்குள் விசாரணை மற்றும் சோதனைக்காக அனுமதியின்றி நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. 
 
இதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டுக்கு 3,000, மாட்டுக்கு 30,000; கஜா இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு