Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா.? பிரதமர் மோடி கேள்வி..!

Senthil Velan
ஞாயிறு, 26 மே 2024 (13:36 IST)
இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வீழ்ச்சியடைந்து வரும் கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.
 
மேலும் இந்தியா கூட்டணியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் வகுப்புவாத மற்றும் மதவாத அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதமர் விமர்சித்தார். 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணியினர் கூறுவதாகவும், அவர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ALSO READ: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து.! லாரி மோதியதில் 11 பேர் பலி..!!
 
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும்  முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியல் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து இன்னொரு மகன் சூரஜ் ரேவண்ணா கைது!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஹோட்டல் உரிமையாளர், மீன் வியாபாரி கைது..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments