Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்து; 13 பேர் பரிதாப பலி..!

பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்து; 13 பேர் பரிதாப பலி..!
, வியாழன், 28 டிசம்பர் 2023 (08:04 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் குணா மற்றும் ஆரோன் நெடுஞ்சாலையில் நேற்று இரவு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்தில் சிக்கியது. அந்த பேருந்தில் எப்படி தீ பிடித்தது என்று பயணிகளுக்கு புரியும் முன்பே பேருந்து முழுவதும் தீ பரவியது.

இதனை அடுத்து அவசர அவசரமாக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்க  முயன்றாலும் 13 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

ஓடும்  பேருந்தில் தீ பிடித்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. இலவச வீட்டுமனை.. அசத்தும் திருப்பதி தேவஸ்தானம்..!