Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எருமை மீது பேருந்து மோதிய வழக்கு.. 28 ஆண்டுக்கு பின் பேருந்து ஓட்டுனருக்கு சம்மன்,..!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (13:07 IST)
28 ஆண்டுகளுக்கு முன்னால் எருமை மாடு மீது பேருந்து மோதியதால் அந்த எருமை மாடு உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கிற்கு தற்போது அந்த பேருந்து ஓட்டுனருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர பிரதேச மாநிலத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுனர் அக்சான் என்பவர் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் எருமை மாடு உயிர் இழந்தது. 
 
இந்த நிலையில் தற்போது 83 வயதான அந்த ஓட்டுனர் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த பேருந்து ஓட்டுநர் சம்மனை பார்த்து போலீசாரிடம் கண்ணீர் சிந்தியதாகவும் என்னால் எப்படி நீதிமன்றத்திற்கு வரமுடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது. 
 
ஆனால் நீதிமன்றத்திற்கு கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் கைது வாரண்ட் பிறப்பிப்பார்கள் என்றும் போலீசார் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments