Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எருமை மீது பேருந்து மோதிய வழக்கு.. 28 ஆண்டுக்கு பின் பேருந்து ஓட்டுனருக்கு சம்மன்,..!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (13:07 IST)
28 ஆண்டுகளுக்கு முன்னால் எருமை மாடு மீது பேருந்து மோதியதால் அந்த எருமை மாடு உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கிற்கு தற்போது அந்த பேருந்து ஓட்டுனருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர பிரதேச மாநிலத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுனர் அக்சான் என்பவர் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் எருமை மாடு உயிர் இழந்தது. 
 
இந்த நிலையில் தற்போது 83 வயதான அந்த ஓட்டுனர் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த பேருந்து ஓட்டுநர் சம்மனை பார்த்து போலீசாரிடம் கண்ணீர் சிந்தியதாகவும் என்னால் எப்படி நீதிமன்றத்திற்கு வரமுடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது. 
 
ஆனால் நீதிமன்றத்திற்கு கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் கைது வாரண்ட் பிறப்பிப்பார்கள் என்றும் போலீசார் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments