Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அண்ணாமலைக்கு பிரபல நடிகை கேள்வி

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (13:03 IST)
தந்தி டிவி பேட்டியில் நீங்கள் இந்து மதம் இல்லை என்று சொன்னீர்கள் என்று அண்ணாமலைக்கு நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டியிருந்தார்.

ALSO READ: திமுக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சிதம்பரம் கோவில் விவகாரம் குறித்து அண்ணாமலை எச்சரிக்கை..!
 
அதில்.  ''இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

இதற்கு ரீடுவீட் பதிவிட்டுள்ள  நடிகை காயத்ரி ரகுராம்,'உங்களுக்கு வெட்கமாக இல்லையா' என்று சில கேள்விகளை அண்ணாமலையிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

1.திமுக நாத்திகம் பற்றி நீங்கள் புகார் செய்கிறீர்கள். ஆனால் தந்தி டிவி பேட்டியில் நீங்கள் இந்து மதம் இல்லை என்று சொன்னீர்கள்.

2. தீக்ஷிதர் பிரச்சனை, தீக்ஷிதர் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு ஓட முயற்சித்தீர்கள். ஆனால் ஜல்ட்ரா குழுவை திருப்திப்படுத்த மட்டுமே இப்போது வெட்கமின்றி ஒரு கடிதம் எழுதுவது வெட்கமாக இல்லையா?

3. முதல்வரின் மனைவி துர்கா அம்மாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினீர்கள்.
இது உன் வீரமா? கோழை.’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments